திருச்சி, மே 11 –
மாலத்தீவில் நடைபெற்ற சர்வதேச மூத்தோர் தடகளப் போட்டிகளில் திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அண்ணாவி, 65 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் அன்பழகன், மகளிர் 55 வயதுக்கு மேற்பட்டோர் பிரிவில் பாக்கியலட்சுமி, ஞான சுகந்தி ஆகியோர் பங்கேற்றனர். இவர்கள் மொத்தம் 9 பதக்கங்களை வென்று இந்தியாவுக்கும் திருச்சி மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளனர். இவர்களின் இந்த சாதனைக்கு தமிழக மற்றும் திருச்சி மாவட்ட விளையாட்டு ஆர்வலர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.



