களியக்காவிளை, ஜன. 27 –
மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கும் நிகழ்ச்சியினை விளவங்கோடு எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் துவக்கி வைத்தார்.
குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி திருத்துவபுரம் அருகே மருதங்கோட்டில் செயல்பட்டு வருகிறது. இந்த கம்பெனி சார்பில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் உதவியுடன் கைவினை கலைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் டூல்ஸ் கிப்ட் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கேடர் இந்தியா நிர்வாக இயக்குனர் மோகன் குமார் தலைமை வகித்தார். குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி நிர்வாக இயக்குனர் ஜெயந்தி வரவேற்றார். விளவங்கோடு தொகுதி எம்.எல்.ஏ தாரகை கத்பர்ட் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கினார்.
மத்திய அரசின் மினிஸ்டறி ஆப் டெக்ஸ்டைல்ஸ் ஆபீஸ் ஆப் டெவலப்மென்று கமிஷனர் துணை இயக்குனர் வீணா, ஐ.சி.ஐ.சி வங்கி கிளை மேலாளர் ராஜேஷ், குறுமத்தூர் புரடியூசர் கரம்பெனி இயக்குனர் ஜெபசாலினி உள்ளிட்டோர் பேசினர். இந்த நிகழ்ச்சியில் நூறு கைவினை கலைஞர்களுக்கு டூல்ஸ் கிப்ட் வழங்கப்பட்டது. குறுமத்தூர் புரடியூசர் கம்பெனி இயக்குனர் வர்த்தனா நன்றி கூறினார்.



