தஞ்சாவூர், ஆக. 23 –
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பாலிடெக்னிக் விளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த திராவிடர் கழக தலைவர் கி. வீரமணி, திராவிடத்தை வேரோடு பிடுங்கி எறிவோம் என்று பாஜக அமைச்சர் அமித்ஷா கூறி வருகிறார். ஏற்கனவே தமிழ்நாட்டின் உரிமைகளை பிடுங்கி விட்டார்கள் என்பதற்காக தான் நாங்கள் போராடி வருகிறோம் தடுத்து நிறுத்தி வருகிறோம். இப்போது வேரோடு என்று சொல்லி அவர்கள் உள்ளே செல்லலாம் என்று கனவு காணுகிறார்கள். வேர் எங்கே இருக்கிறது என்று உங்களால் கண்டுபிடிக்க முடியாது. இந்த வேர் சாதாரண வேர் அல்ல. மண்ணிலே அல்ல. மக்களிடத்தில் இருக்கிறது. வேர் எங்கே இருக்கிறது என்று மண்ணைத் தோண்டி தோண்டி ஆழம் பார்க்கிற போது அந்த மண்ணே மிகப்பெரிய அளவிற்கு சரிந்து பாஜகவை காப்பாற்றுவதற்காக மற்றவர்கள் மனிதாபிமானத்தோடு தமிழ்நாட்டு மண்ணிலே பணி செய்ய வேண்டிய அவசியம் வருமே தவிர ஒருபோதும் வேரை, சல்லி வேரை கூட தொட முடியாது.
நடிகர் விஜய் புதிதாக வந்தவர். இதுவரை தங்களது கொள்கைகளை சொல்லவில்லை. பண்பாடு உள்ள பேச்சு இல்லை. சினிமா டயலாக் பேசி பழக்கப்பட்டவர்கள். முதலமைச்சரை எப்படி அழைப்பது என்று தெரியாத அளவிற்கு இதையும் ஒரு ஒரு திரைப்பட டயலாக் ஆக ஆக்கி கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்குள் பெரிய ஆராய்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது யார் ஓய்வு பெற்று வந்தவர்கள், யார் ஓய்வு பெறாமல் வந்தவர்கள், யார் விருப்ப ஓய்வு கொடுத்தவர்கள் என அந்தத் துறையில் ஆராய்ச்சி நடைபெற்று வருகிறது. அந்த சண்டை முடியட்டும் என்று கூறினார். மேலும் மத்திய அரசின் சட்டம் அரசியல் சட்டத்திற்கு விரோதமானது. குற்றவியல் சட்டத்திற்கு விரோதமானது. இயற்கை சட்டத்திற்கு விரோதமானது என கூறினார். திராவிடர் கழக பொது செயலாளர் ஜெயக்குமார், தஞ்சை மாவட்ட தலைவர் வழக்கறிஞர் அமர்சிங் ஆகியோர் உடனிருந்தனர்.



