மதுரை, ஜூலை 10 –
உலகின் ஃபேவரிட் ஜுவல்லர் ஜோய்ஆலுக்காஸ், தனது மதுரை நேதாஜி ரோடு ஷோரூமில் ஜூலை 10, 2026 முதல் ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோவை’ நடத்துகிறது. ஆவலுடன் எதிர்பார்க்கப்படும் இந்த சிறப்புக் கண்காட்சி, வைர நகைகளின் கைவினைத்திறன், நேர்த்தி மற்றும் புதுமையை கொண்டாடும் மறக்கமுடியாத அனுபவமாக அமையும்.
மணமகள் அணிகலன்களுக்கான பிரமாண்டமான வைர செட் முதல் அன்றாட பயன்பாட்டிற்கேற்ற நவீன வடிவமைப்புகள் வரை, காலத்தால் அழியாத பாரம்பரியத்தையும் சமகால அழகியலையும் ஒருங்கிணைக்கும் அற்புதமான நகைகள் இந்தக் கண்காட்சியில் இடம்பெறுகின்றன. ஒவ்வொரு வடிவமைப்பும் தலைசிறந்த படைப்பாக விளங்குவதுடன், இந்தக் கண்காட்சி காலத்தில் மட்டுமே இவை கிடைக்கும்.
இது குறித்து ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநரான டாக்டர். ஜோய்ஆலுக்காஸ் கூறியதாவது: ‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’என்பது வைரங்களின் மீதுள்ள பெருமைக்கும், நகை வடிவமைப்பில் முழுமைத்தன்மையை நோக்கிய எங்கள் அர்ப்பணிப்பிற்கும் உள்ள தொடர்பை விவரிக்கும் ஓர் நிகழ்வாகும். மதுரை எங்கள் இதயத்தில் தனித்துவமான இடத்தைப் பெற்றுள்ளது. திருவிழா காலத்தை முன்னிட்டு இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. அழகு, தனித்துவம் மற்றும் சிறந்த கைவினைத்திறனை பிரதிபலிக்கும் பிரத்யேக வடிவமைப்புகளை வாடிக்கையாளர்கள் கண்டறிய ஓர் அரிய வாய்ப்பை வழங்கும்.” என்று தெரிவித்தார்.
இந்த சிறப்பு நிகழ்வை முன்னிட்டு, கண்காட்சி நடைபெறும் காலத்தில் ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட மதிப்பில் வைர நகைகள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இலவச தங்க நாணயம் வழங்கப்படும். இது அவர்களின் ஷாப்பிங் அனுபவத்திற்கு மேலும் சிறப்பைச் சேர்க்கும்.
‘பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜூவல்லரி ஷோ’, மதுரையில் உள்ள நேதாஜி ரோடு ஷோரூமில் மட்டுமே ஜூலை 26, 2026 வரை நடைபெறும். ஆடம்பரம், அன்பு மற்றும் காலத்தால் அழியாத அழகின் கதைகளை சொல்லும் அற்புதமான வைர உலகத்தை நேரில் கண்டு ரசிக்க அனைத்து வாடிக்கையாளர்களும் அன்புடன் அழைக்கப்படுகிறார்கள்.



