திருச்சி, ஏப். 22 –
மணப்பாறை நகரப் பகுதிகளில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை நடைபெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் தனிப்படையினர் நடத்திய சோதனையில் நொச்சிமேடு, பொன்முச்சந்தி பகுதிகளில் மது விற்ற தொட்டியபட்டியைச் சேர்ந்த சிவபாலகுமாரன், ஆனம்பட்டியைச் சேர்ந்த துரைகண்ணு, ராஜாலிப்பட்டியைச் சேர்ந்த சின்னசாமி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.



