கிருஷ்ணகிரி, ஜூலை 23 –
கிருஷ்ணகிரி மாவட்டம்போச்சம்பள்ளிமின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. மாவட்ட தலைவர் மணிவேல் தலைமை வகித்தார். போராட்டத்தில், ‘தமிழ்நாடு மின்வாரியத்தில், 70,000 காலி பணியிடங்கள் நிலுவையில் உள்ள நிலையில், கடந்த 5 முதல் 20 ஆண்டுகளாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும். 1998 ஜன., 1 முதல், 2008 வரை விடுபட்ட பி.சி.பி., – சி.எச்.ஐ.டி.டி.யு., மற்றும் ஏ.இ., சான்றிதழ் வைத்துள்ள ஊழியர்களை அடையாளம் கண்டு நேரடி நியமனம் வழங்க வேண்டும். ஐ.எல்.ஓ., வழக்கில் வெற்றி பெற்று பணி ஆணை வைத்திருக்கும், 6,788 நபர்களுக்கு நிலுவை தொகையுடன் பணி ஆணை வழங்க வேண்டும். கே2 ஒப்பந்த ஊழியர்கள் மற்றும் அனைத்து அனல் மின் மற்றும் நீர்மின் உற்பத்தி நிலைய ஒப்பந்த ஊழியர்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.



