கோவை, செப். 3:
கோவை காந்திபுரம் சிக்னல் பகுதியில் போக்குவரத்து காவல்துறை சார்பில் சாலை பாதுகாப்பு குறித்து பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெற்றது. துண்டுப் பிரசுரங்கள் வழங்கி, ஹெல்மெட், சீட் பெல்ட் அணிதல், செல்போன் பயன்படுத்தாமல் வாகனம் ஓட்டுதல், வேகக்கட்டுப்பாட்டை கடைப்பிடித்தல் உள்ளிட்ட விதிகளை பின்பற்ற அறிவுறுத்தினர்.
மேலும், மதுபோதையில் வாகனம் ஓட்டுவதை தவிர்த்து, போக்குவரத்து விதிகளை மதித்து விபத்துகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்வில் உதவி ஆய்வாளர்கள் சுபா, அர்த்தனாரி, தலைமை காவலர் ஆனந்த், காவலர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.



