கோவை, செப். 02 –
பொள்ளாச்சியின் பிரதான சாலையான தேர்நிலையம் பகுதியில் அடிக்கடி கட்டுமான பணிகளுக்கு கொண்டு செல்லும் கனரக வாகனங்களால் ஜல்லிக்கற்களை சிதறி செல்வதால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் காலை நேரங்களில் பரபரப்பாக செல்லும் இருசக்கர வாகனங்களில் அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் பொதுமக்கள் தவறி விழுந்து அடிக்கடி விபத்துகள் நடைபெறுகிறது. இது பொது மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது.
இது தொடர்பாக 26-வது வார்டு கவுன்சிலர் சாந்தலிங்கம் உடனடியாக நகராட்சி தூய்மை பணியாளர்கள் மற்றும் அலுவலர்கள் அழைத்து அந்த ஜல்லிக்கற்கள் மற்றும் சிதறிய மணல் ஆகியவற்றை துப்புரவு பணியாளர்களை கொண்டு அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் கட்டட பணிகளுக்காக கொண்டு செல்லப்படும் மணல், ஜல்லிக்கட்டு போன்றவற்றை கவனமாக கொண்டு செல்ல வாகனங்களுக்கு வேண்டுகோள் தெரிவித்தார்.



