தென்தாமரைகுளம், ஜூலை 29 –
பேரிடர் மேலாண்மை ஏழு நாள் சிறப்புப் பயிற்சி முகாம் “யுவ ஆப்தா மித்ரா” திட்டத்தின் கீழ் ஜாய் பல்கலைக்கழகத்தில் (வடக்கன்குளம்) சிறப்பாக நடந்து முடிந்தது. இப்பயிற்சி முகாமில் நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், தேசிய மாணவர் படை மாணவர்கள் மற்றும் எனது பாரதம் மாணவர்கள் என மொத்தம் 600 மாணவர்கள் கலந்து கொண்டுப் பயிற்சி பெற்றார்கள். இப்பயிற்சி முகாமில் மாணவர்களுக்கு பேரிடர் தயார் நிலை, அவசரகால உதவி, மீட்புப் பணிகள், முதலுதவி மற்றும் சமூக சேவைக் குறித்தப் பயிற்சிகள் வழங்கப்பட்டது. இப்பயிற்சி மாணவர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் பேரிடர் மேலாண்மை வட்டாட்சியர் பாலகிருஷ்ணன், ஜாய் பல்கலைக் கழகத் துணைவேந்தர், பல்கலைக் கழக சார்பு துணைவேந்தர், பல்கலைக் கழகப் பதிவாளர், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படைப் பணிப் பயிற்றுநர்கள், தீயணைப்பு மீட்புப் படைப் பணிப் பயிற்றுநர்கள், சுகாதாரத்துறைப் பணிப் பயிற்றுநர்கள், எனது பாரதம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகக் கல்லூரி, பணகுடி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் முனைவர் இரா. திலகா மற்றும் பேரிடர் மீட்புப் பணி ஒருங்கிணைப்பாளர் அ. சபேசன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார்கள்.



