தருமபுரி, ஏப்ரல் 27-
தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள கருங்கல்மேடு காடுகள் நிறைந்த பகுதியாகும். இந்த வனப்பகுதியில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. இந்த நிலையில் இரைத் தேடி ஊருக்குள் வந்த புள்ளி மானை நாய்கள் துரத்தின. மேலும் நாய்கள் மானை கடித்து காயப்படுத்தி உள்ளது. அதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் தெருநாய்களிடமிருந்து மானை மீட்டனர். பின்னர் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் மானை மீட்டு சிகிச்சை அளித்து மீண்டும் வனப்பகுதியில் விட்டனர்.


