நாகர்கோவில், ஏப். 24 –
பூதப்பாண்டி அருகே உள்ள கேசவன்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஜெரால்டு ராஜ் (46) கார் டிரைவர். தற்போது பெங்களூருவில் உள்ளார். இவர் நாம் தமிழர் கட்சி ஆதரவாளர் ஆவார். சட்டமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்காக கடந்த 20ம் தேதி ஊருக்கு வந்திருந்தார். சம்பவ தினம் கேசவன் புதூர் பஸ் நிறுத்தம் அருகில் உள்ள டீக்கடையில் நின்று நண்பருடன் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது கேசவன் புதூதரை சேர்ந்த நாம் தமிழர் கட்சி ஆதரவாளரான ஸ்டீபன் (49) என்பவரும் அங்கு வந்தார். அவர்கள் அரசியல் சம்பந்தமாக பேசிக் கொண்டிருந்தபோது ஜெரால்டு ராஜு, ஸ்டீபன் ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறில் ஸ்டீபன் அறிவாளால் ஜெரால்டு ராஜை சரமாரியாக வெட்டினார்.
இதில் படுகாயம் அடைந்த ஜெரால்டு ராஜ் பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து ஸ்டீபனை தேடி வருகிறார்கள்.


