புதுக்கடை, ஜூன் 12 –
புதுக்கடை சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக எழுந்த புகாரின் பேரில் புதுக்கடை சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையிலான போலீசார் அந்த பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது பார்த்திபபுரம் பகுதியில் உள்ள ஒரு பெட்டி கடையில் சோதனை செய்தபோது அங்கு அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை 13 பாகெட்டுகளும், கூல் லிப் புகையிலை 6 பாக்கெட்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு, கடை உரிமையாளர் தங்கம் (69) என்பவர் கைது செய்யப்பட்டார்.
இது போன்று கீழ்குளம் பகுதியில் ஆனான்விளை என்ற இடத்தில் ஸ்டான்லி (64) என்பவரின் பெட்டி கடையில் சோதனை செய்த போது, தமிழ் அரசால் தடை செய்யப்பட்ட கணேஷ் புகையிலை 24 பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. போலீசார் ஸ்டான்லியை கைது செய்தனர். இது குறித்து புதுக்கடை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


