ஈரோடு, ஜூலை 8 –
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஈரோடு மாவட்ட மையம் சார்பில் ஈரோடு கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அரசு ஊழியர்களுக்கு கட்டணம் இல்லா சிகிச்சை வழங்கும் வகையில் திருத்திய அரசாணை வெளியிட வேண்டும். புதிய மருத்துவ காப்பீட்டு திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட துணை தலைவர் செந்தில் நாதன் தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் துணைத் தலைவர்கள் செந்தில் நாதன், ராக்கி முத்து, கௌரி சங்கர், இணைச் செயலாளர்கள் சரவண மணி, சசிகலா, சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டம் குறித்து மாவட்ட செயலாளர் விஜய் மனோகரன் விளக்கி பேசினார். கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. முடிவில் மாவட்ட பொருளாளர் சுமதி நன்றி கூறினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.



