தென்காசி, மே 11 –
தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் நிறுவனத் தலைவர் லூர்து நாடார் தலைமையில் தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது.
அந்த மனுவில் பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்ட பழைய குற்றாலத்தில்
அருவியில் பொதுமக்கள் குளிப்பதற்கு நிர்ணயக்கப்பட்டுள்ள கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள்.
குற்றாலத்திற்கு வருகின்ற சுற்றுலா பயணிகளின் மூலம் கிடைக்ககூடிய வருமானத்தைக் கொண்டு இலட்சக்கணக்கான குடும்பங்கள் தென்காசி மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். ஆண்டுதோறும் குற்றால சீசனின் போதும் ஐயப்ப சுவாமி பக்தர்கள் மாலை அணிந்து வருகின்ற போதும் லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் குற்றாலத்திற்கு வந்து செல்லுகின்றார்கள். சுற்றுலா பயணிகளின் நலனுக்காக பெருந்தலைவர் காமராஜரின் ஆட்சி காலத்தில் பழைய குற்றாலத்தில் வீணாக சென்ற தண்ணீரை செயற்கையாக பாறைகளை வடிவமைத்து 1960ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4ம் தேதி பெருந்தலைவர் காமராஜர் பழைய குற்றாலத்தை பொது மக்களின் பயன்பாட்டுக்காக திறந்து வைத்தார்.
பழைய குற்றாலம் அருவி கடந்த ஆண்டு வனத்துறையிடம் ஒப்படைக்கப்பட போகிறது என்ற செய்தியை கேட்டு தமிழ்நாடு நாடார் உறவின்முறைகள் கூட்டமைப்பு மற்றும் பல அமைப்புகள் பழைய குற்றாலத்தை தமிழக அரசு வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்றும் வனத்துறையானது பொதுமக்களிடம் குளிப்பதற்கு கட்டணம் வசூலிக்க கூடும். அதனால் வனத்துறை வசம் ஒப்படைக்க கூடாது என்று கோரிக்கைகள் முன் வைத்தோம். ஆனால் எங்களுடைய கோரிக்கைகள் அனைத்தும் நிராகரிக்கப்பட்டு பழைய குற்றாலம் பகுதியை வனத்துறை வசம் திமுக தலைவர் முன்னாள் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு ஒப்படைத்தது.
தற்போது பழைய குற்றாலம் பகுதிக்குள் வாகனங்கள் நுழைவதற்கு நுழைவு கட்டணம் கட்ட வேண்டி உள்ளது. மேலும் குறிப்பிட்ட பகுதி வரை தான் வாகனங்கள் செல்ல முடியும். அதன் பிறகு வனத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வாகனத்தில் பழைய குற்றாலம் செல்ல பத்து ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும். அருவியில் பொது மக்கள் குளிக்க இருபது ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. மேலும் கழிப்பறை, உடைமாற்றும் அறை போன்றவைகளுக்கு கட்டணம் வசூல் செய்ய வாய்ப்பு உள்ளது.
மேலும் அருவியில் குளிப்பதற்கு மக்களை தாங்கும் திறன் எவ்வளவு இருக்கிறதோ அதுவரை தான் பொதுமக்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று வனத்துறை கட்டுப்பாடு விதித்துள்ளது. பெருந்தலைவர் காமராஜரால் உருவாக்கப்பட்டு சுமார் 65 ஆண்டு காலம் கட்டணம் எதுவும் இல்லாமல் சுற்றுலா பயணிகள் பழைய குற்றாலத்தில் குளித்து மகிழ்ச்சி அடைந்தார்கள்.
சுற்றுலா பயணிகளின் வசதிக்காக பழைய குற்றாலம் அருவியில் குளிப்பதற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு நாடார் உறவின் முறைகள் கூட்டமைப்பின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம் என்று மனுவில் குறிப்பிட்டு இருந்தார்கள்.
உடன் பொருளாளர் சுப்ரமணியன், தென்காசி மாவட்ட தலைவர் குருசாமி நாடார், மாநில கல்வி குழு உறுப்பினர் பாலசுப்பிரமணியன், கிருஷ்ணமூர்த்தி, சமீத் ஆகியோர் கலந்து கொண்டனர்.



