தென்தாமரைகுளம், டிச. 16 –
பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா திட்டம் 25வது ஆண்டு யொட்டி அகஸ்தீஸ்வரம் கிராம வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும் அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறையும் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் உறுதிமொழி ஏற்பு நிகழ்வு நடத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வர் டாக்டர் டி.சி. மகேஷ் தலைமை தாங்கினார். கல்லூரி பொருளாளர் டாக்டர் பிரியதர்ஷினி, தமிழ்த்துறை தலைவர் கு. இளங்குமார், வணிகவியல் துறை தலைவர் ஆர். தர்ம ரஜினி, அகஸ்தீஸ்வரம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பிரேமலதா, நீல பாலகிருஷ்ணன், பொறியாளர் ரீஜன், பஞ்சாயத்து செயலாளர் காளியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்வில் மாணவ மாணவியர்கள் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ஏற்றுக்கொண்டு பேரணியாக சென்று பொதுமக்களிடம் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். பேரணியை கல்லூரி தலைவர் ஜி.என். பாலமுருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கல்லூரி என். எஸ். எஸ் திட்ட அலுவலர் சிவபாலன், என்.சி.சி அதிகாரி பிரபு மாறச்சான் பேராசிரியர் முருக பூபதி மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



