திருவள்ளூர், ஜூலை 29 –
திருவள்ளூரில் பட்டப் பகலில் பிரபல சூப்பர் மார்க்கெட்டில் கத்தியை காட்டி மிரட்டி கொள்ளை கடைக்குள் இருந்த பொதுமக்கள் அலறி அடித்து ஓட்டம்
திருவள்ளூர் வடக்கு ராஜா வீதியில் அமைந்துள்ள பிரபல சூப்பர் மார்க்கெட்டில் இளைஞர் ஒருவர் பொருட்களை வாங்கிக்கொண்டு அதனை பில்லிங் செய்யும் இடத்திற்கு கொண்டு வந்துள்ளார் அப்போது அவர் மறைத்து வைத்துள்ள சுமார் இரண்டடி நீளமுள்ள கத்தி எடுத்து டேபிளில் வைத்துள்ளார். அதனை பார்த்த பில்டிங் இடத்தில் இருந்த பணிப்பெண் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடி உள்ளனர்.
அதன் பின்பு அவர் அங்கிருந்து பணத்தை கொள்ளையடித்துக் கொண்டு தப்பி சென்றதாக தெரிகிறது. இதனை திருவள்ளூர் நகர காவல் நிலையத்துக்கு தகவலளித்ததின் பெயரில் காவலர்கள் விரைந்து கொள்ளையடித்த நபரை பிடித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்ட பகலில் இத்தகைய கொள்ளை சம்பவம் நடந்ததை திருவள்ளூர் நகர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.



