களியக்காவிளை, ஜுலை 1 –
அனுக்கிரக சித்த வர்ம மற்றும் தேவதாசன் வைத்தியர் சித்த வர்ம ரிசர்ச் பவுண்டேஷன் இணைந்து நடத்திய சிந்தார்மணி நாட்டு வைத்திய சங்கமம் மற்றும் 23வது குரு பூர்ணிமா விழா படந்தாலுமூடு ஜோதி ஜீவபூர்ண செண்டரில் நடந்தது. நிகழ்ச்சியில் டாக்டர் சுரேஷ் குமார் தலைமை வகித்தார். மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினர். பிரின்ஸ் வைத்தியர் வரவேற்றார்.
தொடர்ந்து குருக்கன்மார்கள் திரு உருவ படத்திற்கு முன் ஜோதி ஏற்றப்பட்டது. குரு வணக்கம் நடந்தது. வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம சுவாமி சைதன்யானந்த ஜி மஹாராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மெதுகும்மல் ஊராட்சி முன்னாள் தலைவர் சசிகுமார், பாறசாலை ஊராட்சி தலைவி உஷா குமாரி, பேச்சிப்பாறை மூலிகை ஆராய்ட்சி நிறுவன முனைவர் ரிச்சார்டு கென்னடி, மூலச்சல் டாக்டர் ராஜேந்திரன், ரிச்சார்டு குருக்கள் ஹரிஷ் வைத்தியர் உள்ளிட்டோர் பேசினர். பாறசாலை பிளாக் பஞ் துணை தலைவர் அருன் மூலிகை கண்காட்சியை திறந்து வைத்தார். தொடர்ந்து இலவச மருத்துவ முகாம், மூலிகை கண்காட்சி, யோகா, களரி விளையட்டு, புத்தக வெளியிட்டு உள்ளிட்டவைகள் நடந்தது.
விழாவில் சிவராமன் ஆசான் நினைவு சித்த மர்ம குருகுலத்தின் ஆண்டு விழாவும், குருபூர்ணிமா விழா, 2025–2026 கல்வியாண்டில் குருகுலப் பயிற்சியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வைத்திய ஜோதி விருது, களரி ஆசான்மார்களுக்கு அவார்டு, சமூகத்தில் சேவை செய்யும் சமூக சேவகர்களுக்கு கர்ம சிரேஸ்ட அவார்டு உள்ளிட்ட அவார்டுகள், சான்றிதழ்கள், விருதுகள் வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் மேக்கோடு சுதா சசீந்திரன் சித்த மருத்துவ கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், தமிழகம், கேரளா, கர்நாடகா, ராஜஸ்தான், பாண்டிச்சேரி உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து களரி ஆசான்மார்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை படந்தாலுமூடு அனுக்கிரக சித்த வர்ம வைத்திய சாலை டாக்டர் சுரேஷ் குமார் தலைமையில் நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.



