By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவில் அருகே கோவில் நிலத்தில் உள்ள வீடுகளை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவில் அருகே கோவில் நிலத்தில் உள்ள வீடுகளை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் அருகே கோவில் நிலத்தில் உள்ள வீடுகளை இடிக்க எதிர்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு

Last updated: August 4, 2026 6:17 pm
August 4, 2026
15 Views
Share
SHARE

நாகர்கோவில், ஆக. 4 –

நாகர்கோவில் அடுத்த ஈத்தாமொழி பூச்சிவிளாகம் சந்திப்பு பகுதியில் திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலுக்கு சொந்தமான சுமார் ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிறத்தில் 50 ஆண்டுகளுக்கு மேலாக 50 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடு கட்டி வசித்து வருகின்றனர். இங்கு வசிக்கும் மக்களின் வீடுகளுக்கு தர்மபுரம் ஊராட்சி மூலமாக முறையே வீட்டு வரி, தண்ணீர் வரி மற்றும் மின்னிணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இந்து சமய அறநிலைத்துறை அதிகாரிகள் மற்றும் கோயில் தரப்பினர் அப்பகுதியில் வசிக்கும் மக்களை அப்புறப்படுத்தும் நோக்கில் அங்கு வந்து அவர்கள் வீடுகளை இடிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மக்கள் அதிகாரிகளை கண்டித்து நாகர்கோவில் – ஈத்தாமொழி சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து கருமையாக பாதிக்கப்பட்டது.

பொதுமக்களுக்கு ஆதரவாக மார்க்சிஸ்ட் கட்சி, திமுக, அதிமுக கட்சியினர் ஏராளமானோர் போராட்டத்தில் பங்கேற்றனர். பின்னர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் போராட்டத்தை கைவிட மறுத்து பொதுமக்கள் தொடர்ந்து போராட்டம் நடத்தினர். பல ஆண்டுகளாக தங்கள் இந்த பகுதியில் குடியிருந்து வரும் நிலையில் எந்த முன்னறிவிப்பும் இன்றி அதிகாரிகள் இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தனர். ஆனால் அதிகாரிகள் தரப்பில் நீதிமன்ற உத்தரவை காட்டி அதன் பேரில் நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.

பொதுமக்கள் வீடுகளை இடிக்க அவகாசம் கேட்டனர். ஆனால் கோர்ட்டு உத்தரவு என்பதால் நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும் என அதிகாரிகள் கூறினார். பின்னர் நீதிமன்றத்திற்கு பொதுமக்கள் தரப்பில் அவகாசம் கேட்டு கடிதம் தருமாறும், நீதிமன்றத்தின் தாக்கல் செய்து அதன்படி அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் கூறினார்கள்.


விளம்பரம்

You Might Also Like

பட்டாக்கத்தி தாக்குதல்: வாலிபரிடம் துணிச்சலுடன் செயல்பட்ட சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கு மாவட்ட எஸ்.பி சுந்தரவதனம் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்
ரீத்தாபுரத்தில் மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
வள்ளல் பொன் பாண்டித்துரை தேவர் அவர்களின் முழுமையான பெயரை மதுரை கரிமேடு மாநகராட்சி மேல்நிலைப் பள்ளிக்கு சூட்ட வேண்டும்: மாவட்ட ஆட்சியரிடம் மனு
மண்டைக்காடு கோவில் சமய மாநாடு துவக்கம்
கோதையாற்றில் படகு சவாரி சென்ற பேராசிரியையிடம் அத்துமீறல்: 3 வாலிபர்கள் மீது வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கோயம்புத்தூர்

சேரன் நகர் பொதுமக்கள் சார்பில் மக்கள் பயன்பாட்டு உபகரணங்கள் வழங்கப்பட்டது

June 9, 2025
92 Views
64 கிலோ போதை புகையிலை போலீசாரால் பறிமுதல்
போது விநியோகம் திட்ட அரிசி மினி லாரியில் கடத்தியவர் கைது
திருவாடுதுறையில் விநாயகர் ஆலய கும்பாபிசேகம்
போலீசாரின் குடும்பத்தைச் சேர்ந்த 20 பேருக்கு டிரைவிங் லைசென்ஸ்; ஆயுதப்படை மைதானத்தில் எஸ்.பி. வழங்கினார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account