ஈரோடு, மே 1 –
ஈரோடு நந்தா பொறியியல் கல்லூரி மற்றும் தொழில்நுட்ப கல்லூரிகளின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் வேலைவாயப்பு தினம் நந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் சண்முகன் தலைமையில் நடைபெற்றது. அறக்கட்டளையின் அங்கத்தினர் பானுமதி குத்துவிளக்கு ஏற்றி விழாவை தொடங்கி வைத்தார். தொழில் அதிபர் தியாகு தாமலிங்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
நந்தா பொறியியல் கல்லூரியின் முதல்வர் முனைவர் ரகுபதி வரவேற்றார். விழாவில் நந்தா கல்வி அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர்கள் நந்தகுமார் பிரதீப், திருமூர்த்தி மற்றும் நந்தா தொழில் நுட்ப வளாகத்தின் நிர்வாக அதிகாரி வேலுசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினர் எல்.டி.எம் நிறுவன வளாகத்தின் தலைவர் தியாகு தாமலிங்கம் 1735 மாணவர்களுக்கு பணிநியமன ஆணைக்கான உறுதி சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
முடிவில் நந்தா தொழில்நுட்ப கல்லூரியின் முதல்வர் முனைவர் நந்தகோபால் நன்றி கூறினார். விழாவினை ஏற்பாடு செய்திருந்த வேலைவாய்ப்பு துறை ஒருங்கிருங்கிணைப்பாளர்களும், விரிவுரையாளர்களுமான பிரபு, சிவராமகிருஷ்ணன், திருவேங்கடசாமி, நவீன் மற்றும் குழுவினர்களை கல்லூரி நிர்வாகத்தினர்கள் பாராட்டினார்கள்.



