தென் தாமரைகுளம், செப். 15 –
தென்தாமரைகுளம் பேரூர் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 117 வது பிறந்த தின விழா இன்று தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. இதையொட்டி இன்று காலை அலங்கரித்து வைக்கப்பட்ட பேரறிஞர் அண்ணாவின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி இனிப்புகள் வழங்கப்பட்டது. தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் எனும் தலைப்பில் உறுதிமொழி ஏற்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பேரூர் திமுக செயலாளரும், 7-வது வார்டு கவுன்சிலருமான பூவியூர் காமராஜ் தலைமை வகித்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய பொருளாளர் எட்வின்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கிளை செயலாளர்கள், மதியழகன், நாதன், ஜேக்கப், அன்பு ரமேஷ், டென்னிஸ், இளைஞரணி அஜுராம், அஞ்சித், சூரியகாந்த் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



