தென்தாமரைகுளம், ஜூன் 26 –
உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இன்று காலை குமரி சமூக விடியல் இயக்கம் சார்பில் போதைக்கு எதிரான விழிப்புணர்வு ஜோதி ஓட்டம் தென்தாமரைகுளம் பேரூராட்சி அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பு முடிவடைந்தது.
நிகழ்ச்சியின் தொடக்கமாக தென் தாமரை குளம் அரசு தொடக்கப்பள்ளி மாணவிகள் தமிழ் தாய் வாழ்த்து பாடினர். இயக்க செயலாளர் விஜயகங்காதரன் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார், ஒருங்கிணைப்பாளர் மைக்கேல்ராஜ் வரவேற்று பேசினார்,குமரி சமூக விடியல் இயக்க தலைவர் ராமசாமி தலைமை உரையாற்றினார்,
தென்தாமரைகுளம் தூய பனிமய அன்னை ஆலய பங்கு தந்தை எட்வர்ட், இயற்கை ஆர்வலர் சுதாமதி, டாக்டர் அரசு, இயக்க துணைச்செயலாளர் டாக்டர் டேனியல் தேவசுதன், சமூக ஆர்வலர் தர்மராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தென் தாமரைகுளம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் பிரைட் பிளசிங் ஜோதி ஓட்டத்தை தொடங்கி வைத்தார். குமரி சமூக விடியல் இயக்க துணைதலைவர் ஜெயச்சந்திரன் நன்றியுரையாற்றினார். நிகழ்ச்சியில் இயக்கத்தின் பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள், மக்கள் பிரதிநிதிகள், பொது மக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



