தென்காசி, ஆகஸ்ட் 05 –
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யை இழிவாகப் பேசியதாகக் கூறி திமுக இளைஞரணி செயலாளரும் சட்டசபை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலினைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றி கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதன் ஒரு பகுதியாக தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையம் முன்பு தமிழக வெற்றி கழகத்தின் மாவட்டச் செயலாளர் ராஜ பிரகாஷ் தலைமையில் தவெகவினர் திரண்டு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராகக் கண்டன வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்தியவாறு தவெகவினர் முழக்கமிட்டனர்.
அரசியல் மற்றும் மேடை நாகரிகத்துடன் பேச வேண்டும் என்றும், பொது மேடையில் பேசிய பேச்சை அவர் தனது வீட்டில் பேசுவாரா என்றும் கேள்வி எழுப்பி ஆவேசமாகக் கோஷங்களை எழுப்பினர். தென்காசியில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் 200-க்கும் மேற்பட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்துகொண்டு தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.



