திருவெண்ணெய்நல்லூர், மார்ச் 3 –
திருவெண்ணெய்நல்லூர் அருகே கருவேப்பிலைபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் வைத்தி மகன் கேசவன் (73). இவர் மடப்பட்டு – பண்ருட்டி சாலையை கடக்கும்போது மடப்பட்டில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத கார் மோதி கேசவன் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தார்.
பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கேசவன் பரிதாபமாக உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து கேசவன் மகன் பாலகிருஷ்ணன் திருவெண்ணெய்நல்லூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


