திருச்சி, ஏப். 11 –
திருச்சி அரியமங்கலம் உக்கடை பகுதியில் நேற்று இரவு 8.30 மணிக்கு திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாக்குகள் சேகரித்து உரையாற்றினார். அப்பொழுது அவர் பேசுகையில்: பெருமளவில் பெண்கள் வந்திருக்கிறீர்கள் இதிலிருந்து தெரிகிறது. எங்களுடைய வாக்கு உதயசூரியனுக்கு தான் என்று உறுதியோடு ஊக்கத்தோடு மகிழ்ச்சியோடு வந்திருக்கிறீர்கள் என்று பார்க்கிறபோது எங்களுக்கும் மிகுந்த மகிழ்ச்சி.
பெண்களுக்கு இந்த ஆட்சி திராவிட மாடல் ஆட்சி அவ்வளவு நன்மைகள் திட்டங்கள் செய்து வருகிறது பெண்களுக்கென அதிக திட்டங்களை அறிவித்திருக்கிறார்கள். மற்ற தேர்தல் போல இந்த தேர்தல் இல்லை. இந்த தேர்தல் சாதாரண தேர்தலும் இல்லை. மிக முக்கியமாக நமது வாழ்வாதாரத்திற்கான தேர்தல். காரணம் ஒரு காலத்தில் பெண்கள் எப்படி அடிமைப்படுத்தி வைத்திருந்தார்கள் இன்றைக்கு அந்த நிலை மாறியிருக்கிறது அல்லவா? பெரிய வாய்ப்பாக இன்றைக்கு வெளி நாட்டில் போய் பயிற்சி எடுத்து வருகிறார்கள்.
பள்ளி கல்வி துறை சிறப்பாக செய்து வருகிறது. அந்த துறைக்கு அமைச்சராக இருக்க கூடிய நமது திருவெறும்பூர் தொகுதி வேட்பாளர் அன்பில் மகேஸ் பொய்யா மொழியை அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். வருகிற 23-ம் தேதி வாக்கு செலுத்தும் போது அன்பில் மகேஸ் பொய்யாமொழி பெயர் எங்கு உள்ளது என்று பாருங்கள். அதற்கு நேராக இருக்கும் உதய சூரியன் சின்னத்தில் பொத்தானை அழுத்தினால் விளக்கு எரியும். அங்கு விளக்கு எரிந்தால் உங்களுக்கு எல்லாம் வெளிச்சம் கிடைக்கும். இவ்வாறு பேசினார்.
இக்கூட்டத்திற்கு மாவட்ட தி க தலைவர் ஆரோக்கியராஜ் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர்கள் ஒரத்தநாடு குணசேகரன், தஞ்சை ஜெயக்குமார், மாநில தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ப.க தலைவர் மதிவாணன் வரவேற்றார். திமுக பகுதி செயலாளர் மதிவாணன், கமால் உள்ளிட்ட திமுக பொருப்பாளர்கள் திக தோழர்கள் கலந்து கொண்டனர்.



