நாகர்கோவில், ஜனவரி 7 –
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு உயர் கல்வித்துறை அறிவுறுத்தலின்படி, இன்று பாலின உளவியல் குறித்த கண்காணிப்பு குழுவும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனமும் இணைந்து கல்லூரி மாணவர்களுக்கான மனநலம் குறித்த விழிப்புணர்வு பயிற்சி கல்லூரி முதல்வர் முனைவர் மு. சுசீலாபாய் தலைமையில் நடைபெற்றது.
இந்த விழிப்புணர்வு பயிற்சியில் புஷ்பா மற்றும் ராணி ஆகியோர் மனநலம் சார்ந்த சிறப்புப் பயிற்சியை வழங்கினர். ஆங்கிலத்துறைத் தலைவர் முனைவர் லிண்டா செல்லா வரவேற்புரை வழங்கினார். இயற்பியல் துறை இணைப் பேராசிரியர் முனைவர் கார்மல் விஜிலாபாய் நன்றியுரை ஆற்றினார். முனைவர் சுஜிதா குமாரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். குழு உறுப்பினர்கள் பயிற்சிக்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த பயிற்சியில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவ, மாணவியர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.



