திருச்சி, ஏப். 30 –
திருச்சி சிங்காரத்தோப்பு பகுதியில் தையல் கடை நடத்தி வரும் மணிமாறன் என்பவரின் கடையின் பொருட்கள் 2009ல் திருடு போனது. இது குறித்து புகார் அளிக்க சென்றபோது கோட்டை காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் முத்துக்குமார் 1500 ரூபாய் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது.
லஞ்சம் கொடுக்க விரும்பாத மணிமாறன் லஞ்ச ஒழிப்பு துறையில் அளித்த புகாரின் பேரில், ஆய்வாளர் முத்துக்குமார் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு விசாரணை முடிந்து இன்று நீதிபதி புவியரசு, முத்துக்குமாருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனையும் பத்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.



