திருச்சி, ஏப். 30 –
திருச்சி மாவட்டம் பம்பரம்சுத்தி கிராமத்தைச் சேர்ந்த நறுவுலி என்பவருக்கு வாரிசு சான்றிதழ் வழங்க 2009-ல் ரூ.500 லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ராதா, வழக்குப் விசாரணையின் முடிவில் நேற்று நீதிமன்றத்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ.5000 அபராதம் விதிக்கப்பட்டார். இந்த தீர்ப்பு லஞ்சம் வாங்குவோருக்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.


