திருச்சி, ஏப். 30 –
கரூர் மாவட்டம் நங்கவரத்தைச் சேர்ந்த முத்தமிழ் செல்வி, திருச்சி உக்கடையில் உள்ள PNA நிறுவனத்தில் வாங்கிய மின்சார ஸ்கூட்டர், சார்ஜ் செய்யும்போது வெடித்து எரிந்துள்ளது. இதனால், உற்பத்தி நிறுவனமான தெலுங்கானா பி.யு.ஆர். நிறுவனம் மீது முத்தமிழ் செல்வி திருச்சி மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த ஆணையம், இரண்டு நிறுவனங்களும் சேர்ந்து முத்தமிழ் செல்விக்கு ₹1.84 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது.



