திருச்சி, ஜூன் 11 –
திருச்சி மாவட்டம், தா. பேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமன்ற உறுப்பினர் விக்னேஷ் தலைமையில் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் ஒன்றிய அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், ஊராட்சி செயலர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர். தா. பேட்டை ஒன்றியத்தில் உள்ள 25 ஊராட்சிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப் பணிகள் குறித்து எம்எல்ஏ விக்னேஷ் கேட்டறிந்தார். மேலும், சாலை வசதி, குடிநீர் வசதி, தெருவிளக்கு, பள்ளி மாணவர்களுக்கான கட்டிட வசதிகள் போன்ற அடிப்படை வசதிகள் குறித்த கோரிக்கைகள் மற்றும் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.



