தென்தாமரைகுளம், ஆக. 18 –
கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கோவளம் ஊராட்சி, தெற்கு குண்டல் பகுதி பொதுமக்கள் சின்டெக்ஸ் டேங்க் மற்றும் குடிநீர் குழாய் அமைத்து குடிதண்ணீர் வசதி செய்து தர கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என். தளவாய் சுந்தரத்திடம் கோரிக்கை வைத்திருந்தனர். இப்பகுதி பொதுமக்களின் இக்கோரிக்கையினை ஏற்று தனது சொந்த நிதியிலிருந்து ரூ. 60 ஆயிரம் செலவில் குடிநீர் வசதியினை செய்து கொடுத்தார். இதனை மக்களுக்கு அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி நேற்று தெற்கு குண்டல் நாராயணசுவாமி கோவில் அருகே நடைபெற்றது.
இதனை மக்களுக்கு அர்ப்பணித்து தளவாய்சுந்தரம் மக்களிடம் தெரிவிக்கையில்,
மக்களின் எதிர்பார்ப்புகளையும், தேவைகளையும் அறிந்து அதனை நிறைவேற்றி வருகிறேன். மக்களின் நலன் தான் எனக்கு முக்கியம். மக்களின் நலனுக்காக நல்ல காரியங்களை தொடர்ந்து செய்வேன். இக்குடிநீர் வசதியினை மக்கள் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். என்றும் உங்களோடு இருந்து உங்களின் தேவைகளை நிறைவேற்றுவேன். கிராம முன்னேற்றமே நாட்டின் வளர்ச்சியை உருவாக்கும் என அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்ச்சியில் தெற்கு குண்டல் ஊர் தலைவர் ஐயப்பன், செயலாளர் முத்துகுமார், கவுன்சிலர் செல்வி, அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழகச் செயலாளர் தாமரை தினேஷ், மாவட்ட கழக துணைச் செயலாளர் சுகுமாரன், மாவட்ட இளைஞர், இளம் பெண்கள் பாசறை செயலாளர் அக்சயா கண்ணன், அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய கழக பொருளாளர் தங்கவேல், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளர் பாலமுருகன், கிளை செயலாளர் பாலகிருஷ்ணன், கழக நிர்வாகிகள் முகுந்தன், பெருமாள், சுரேஷ், பாலன், ஜெயராஜா, சந்திரன், முத்துகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



