தருமபுரி, ஏப்ரல் 19 –
தருமபுரி சட்டமன்ற தொகுதியில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிடும் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். மேலும் தருமபுரி நகரம், கொல்லஅள்ளி ஊராட்சி மற்றும் பல்வேறு ஊராட்சிகளுக்குப்பட்ட பகுதிகளில் கிராமம் கிராமமாக சென்று வேட்பாளர் சௌமியா அன்புமணி மாம்பழம் சின்னத்திற்கு வாக்குகளை சேகரித்தார். அப்போது அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதைத் தொடர்ந்து அவர் கூறியதாவது: அதிமுக தலைமையிலான அரசு அமைந்தவுடன் மகளிர் உரிமை தொகை ரூ. 2000 ஆக உயர்த்தி வழங்கப்படும். அனைவருக்கும் இலவச பிரிட்ஜ் வழங்கப்படும். பேருந்துகளில் ஆண்களும் இலவசமாக பயணம் செய்யலாம். காவேரியிலிருந்து கடலில் கலக்கும் உபரி நீரை மீன் மோட்டார் மூலம் ஏரி, குளம் ஆகியவைகளில் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்படும்.
சிப்காட் பணி நிறைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். தருமபுரி முதல் மொரப்பூர் வரை ரயில்வே பணி விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாஜக மாவட்ட செயலாளர் சரவணன், அமமுக மாவட்டச் செயலாளர் டி.கே.ராஜேந்திரன், அதிமுக நகரச் செயலாளர் பூ கடை ரவி மற்றும் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், பொதுமக்கள் உடனிருந்தனர்.



