தருமபுரி, ஆக. 26:
தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில், கட்சியின் நிறுவனர் கேப்டன் விஜயகாந்தின் 74-வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தருமபுரி கிழக்கு மாவட்ட செயலாளர் குமார் தலைமையில், மாநில அவைத் தலைவர் மருத்துவர் இளங்கோவன் முன்னிலையில் தருமபுரி நகரப் பேருந்து நிலையத்தில் 74 கிலோ கேக் வெட்டி பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
இதையொட்டி, முன்னதாக பாளையம்புதூரில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்திற்கு உணவு வழங்குவதற்காக மளிகைப் பொருட்கள் வாங்கப்பட்டன. தொடர்ந்து செங்கொடிபுரத்தில் நகர செயலாளர் சங்கர் தலைமையில் கேக் வெட்டி, 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் மதிய உணவு வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மற்றும் மேற்கு மாவட்ட பொருளாளர்கள் சீனிவாசன், ராமச்சந்திரன், மாநில கேப்டன் மன்ற துணைச் செயலாளர் புல்லட் மாரிமுத்து, மேற்கு மாவட்ட துணைச் செயலாளர் மணி, தருமபுரி நகர மகளிரணி சுதா, முனியப்பன், ஒன்றிய செயலாளர்கள் விக்னேஷ், சரவணன், மணி, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் செந்தாமரை, கண்ணன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



