திருப்பூர், ஏப். 08 –
திமுக மற்றும் அதன் கூட்டணியை தோற்கடிக்க இந்து முன்னணி பணியாற்றும் என்று இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் திருப்பூரில் பேட்டி.
இந்து முன்னணி அரசியல் கட்சி கிடையாது. ஆனால் தற்போதுள்ள தமிழக அரசு இந்துக்களுக்கு எதிரான அரசாங்கமாக உள்ளது. ரம்ஜான், பக்ரீத், கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகைகளை கொண்டாடுகிறார்கள், வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்கள். ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்வதில்லை.
திருப்பரங்குன்றத்தில் சட்டரீதியாக நீதிமன்றத்தை நாடி மீண்டும் தீபம் ஏற்ற அனுமதி பெற்ற பிறகும் தீபம் ஏற்ற விடாமல் தடுத்தது தான் திமுக அரசு. சட்டத்தை மதிக்காமல் தடை போட்டு உள்ளது. அங்குள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை மன்னிப்பு கேட்க வைத்த அரசாக தான் திமுக விளங்குகிறது. மலை மீது ஆடு வெட்டுவோம், கோழி வெட்டுவோம் என்று சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் தீபம் ஏற்றுவோம் என்று சொன்னவர்கள் மீது வழக்கு போடப்பட்டது.
மேலும் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து உள்ளது. குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை பாலியல் துன்பத்திற்கு தள்ளப்படுகிறார்கள். அதேபோன்று பள்ளி மாணவர்கள் போதை பழக்கத்திற்கு அடிமையாகி உள்ளார்கள். தமிழகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட போதை வஸ்துக்கள் புழக்கத்தில் உள்ளது. கொலை, கொள்ளை, கற்பழிப்பு அனைத்தும் இந்த போதையால் தான் நடைபெறுகிறது.
எனவே இந்துக்களுக்கு விரோதமாக உள்ள இந்த அரசாங்கத்தை தோற்கடிக்க வேண்டும் என்பதற்காகவே இந்து முன்னணி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. திருப்பூரில் குப்பைகளுக்கு சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த நிதி என்ன ஆனது என்று தெரியவில்லை. அதேபோன்று வரி பல மடங்கு அதிகரித்துள்ளது. இதனால் யாராலும் தொழில் செய்ய முடியவில்லை. அதே போன்று ஆகம விதிகள் படி கோவில் கும்பாபிஷேகம் செய்யாமல் ஆன்மீகவாதிகள் மற்றும் தொழிலதிபர்களிடம் பணத்தைப் பெற்று அறநிலைத்துறை கணக்கில் அவர்கள் செய்தது போல் எழுதி விடுகிறார்கள்.
மேலும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நான் கிறிஸ்தவனாக இருப்பதில் பெருமைப்படுவதாக தெரிவித்தார். நாங்கள் எந்த சமூகத்திற்கும் விரோதியானவர்கள் அல்ல. அனைத்து பண்டிகைகளுக்கும் வாழ்த்து சொல்ல வேண்டும் என்று தான் கூறுகிறோம். தற்பொழுது வேல் தான் கதாநாயகனாக உள்ளது. ஜோசப் விஜய் உட்பட அனைவரும் வேல் கொடுக்க ஆரம்பித்து விட்டனர். ஆலங்குளம் பனைத் தொழிலாளி மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதற்கு இந்து முன்னணி கடும் கண்டனம் தெரிவிப்பதாக தெரிவித்தார்.



