தஞ்சாவூர், ஜூலை 13 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் 43 சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையிலும், 1.50 லட்சம் டன் சேமிக்க இட வசதியும் உள்ளது. குறுவை, சம்பா பருவத்தில் 8.81 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என தஞ்சாவூரு மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு ள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டத்தில் 2025-26 ஆம் ஆண்டு பருவத்தில் முடிவுற்ற குறுவை, சம்பா பருவத்தில் மொத்தம் 8.81 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் 15 ஆம் தேதி முதல் கோடை முன் பட்ட குறுவை நெல் கொள்முதல் தொடங்கப்பட்டு, 403 நேரடி நெல் கொள்முதல் நிலைய ங்கள் செயல்பட்டு வருகின்றன. விவசாயிகளின் கோரிக்கையை அடிப்படையிலே மேலும் 40 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட உள்ளன.
இதுவரை 1.52 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இவற்றில் 1.06 லட்சம் டன் நெல் உடனுக்குடன் இயக்கம் செய்யப்பட்டு கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மேலும் 1.50 லட்சம் டன் நெல் கூடுதலாக கொள்முதல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது நாள் ஒன்றுக்கு சராசரியாக 6 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நெல் கொள்முதல் மற்றும் இயக்கப் பணிகளை விரைவுப்படுத்தும் வகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் 43 இடங்களில் 5.72 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் தயார் நிலையில் செயல்பட்டு வருகிறது. இந்த கிடங்குகளில் சுமார் 2000 பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். தினமும் 500 முதல் 600 லாரிகள் மூலம் நெல் இயக்கம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மண்டலத்தில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு ரயில் மூலம் நெல் இயக்கத்தை துரிதப்படுத்த மாவட்ட நிர்வாகத்தின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த மாதம் 42,000 டன் நெல் இயக்குவதற்கான கூடுதல் ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. மாவட்டத்தில் செயல்பட்டு வரும் 46 அரவை முகவர்கள் மூலம் 3000 டன் நெல் அரவை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தினமும் 2000 டன் முதல் 3000 டன் நெல் கிடங்குக ளில் இருப்பு வைக்கப்பட்டு வருகிறது.
மாவட்டத்திலுள்ள 12 திறந்த வெளி நெல் சேமிப்பு மையங்களில் நெல் அட்டிகள் மழையில் நனையாதவாறு தரமான தார்பாய்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளது. மழைநீர் தேங்காமல் இருக்க வடிகால் வசதிகள் செய்யப்பட்டுள்ளதுடன், நெல் அட்டிகள் சரியாமல் பாதுகாப்பாக அடுக்கப்பட்டுள்ளது உறுதி செய்ய தாசிதார் தலைமையிலான கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
விவசாயிகள் கொண்டு வரும் நெல்மணிகள் தாமதம் இன்றி கொள்முதல் செய்யப்பட்டு உடனுக்குடன் இயக்கம் செய்யப்படுவது போதுமான தேவையான போதிய சேமிப்பு இட வசதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. நெல் கொள்முதல் பணிகள் எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேற்கண்டவாறு அதில் கூறப்பட்டுள்ளது.



