தஞ்சாவூர், மே 1 –
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்பு துறை சார்பில் பாரதிதாசன் 136 வது பிறந்த நாளையொட்டி அரசு அறக்கட்டளை சொற்பொழிவு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் மொழி பெயர்ப்பு துறை தலைவர் முருகன் அனைவரையும் வரவேற்றார். முனைவர் பட்ட ஆய்வாளர் வீரமணிகண்டன் இணைப்புரை வழங்கினார். நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழக துணைவேந்தர் குழு உறுப்பினர் பாரத ஜோதி, பாரதிதாசன் திருஉருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
வளர்தமிழ்ப்புல முதன்மையர் குறிஞ்சிவேந்தன், தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னாள் மொழிபெயர்ப்பு துறை தலைவர் பழனி அரங்கசாமி, தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரி தமிழ் துறை இணை பேராசிரியர் ராஜமாணிக்கம் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நிறைவாக மொழிபெயர்ப்பு துறை உதவி பேராசிரியர் விஜய ராஜேஸ்வரி நன்றி கூறினார். கருத்தரங்கில் பேராசிரியர்கள், முனைவர் பட்ட ஆய்வாளர்கள், மாணவ மாணவிகள் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



