தஞ்சாவூர், ஏப்ரல் 28 –
அருங்கானுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை சார்பில் இளம் மாணவ மாணவிகளை தன்னார்வலராக மாற்றும் முயற்சியாக கோடைகால ஒரு நாள் இயற்கை பயிற்சி முகாம்
தஞ்சாவூர் மாவட்ட வன அலுவல க வளாகத்தில் அமைந்துள்ள அமைப்பின் அலுவலகத்தில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் மாணவ, மாணவிகள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூர் மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார். முகாமை கும்பகோணம் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் ப்ரீத்தி சந்திரமோகன் ஒருங்கிணைத்தார். நிகழ்வில் அமைப்பைச் சேர்ந்த சரவணன், குலோத்துங்கன், பாரத பிரசாத், சக்திதரன் ஆகியோர் இணைந்து ஒருங்கிணைத்து நடத்தினர்.
நிகழ்வில் அமைப்பின் நிறுவனரும், இயக்குனருமான முனைவர் சதீஷ்குமார் ராஜேந்தி ரன் வன உயிர்கள் பற்றி அடிப்படை அறிமுகம், மீட்பு பணிகள், ஆராய்ச்சி செயல்பாடுகள் மற்றும் சமூக விலங்குகள் குறித்து விழிப்புணர்வு குறித்து பேசினார். நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக கலந்து கொண்ட மாணவர்களுக்கு இயற்கை பயிற்சி முகாமில் பங்கேற்றதற்கான சான்றிதழ் வழங்கப்பட்டன.



