தக்கலை, ஜூலை 3 –
தக்கலை அருகே சரல்விளை என்ற இடத்தில் இருந்து பண்னிப்பாகம் பகுதிக்கு செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையின் அருகாமையில் பட்டணம் கால்வாய் செல்லுகிறது. இந்த கால்வாய்யின் கரையில் இரவு நேரத்தில் மர்ம நபர்கள் தரிவிளைமுக்கு என்ற பகுயில் கழிவுகளை கொட்டி செல்வது வழக்கம். இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வந்தது. எனவே கழிவுகளை கொட்டி செல்லும் நபர்களை பிடிக்க இளைஞர்கள் அந்த பகுதியில் கண்காணித்தனர்.
இந்த நிலையில் இன்று காலை 11 மணி அளவில் அந்த வழியாக கழிவுகளோடு ஒரு டெம்போ செல்வதை கவனித்த கோதநல்லூர் பேரூராட்சி துப்புரவு மேற்பார்வையாளர் அந்த வாகனத்தை துரத்தி சென்றார். பின்னர் கழிவுகளுடன் டெம்போவை சிறை பிடித்தனர். மேலும் இது குறித்து கோதநல்லூர் பேரூராட்சி தலைவர் கிரிஸ்டல் பிறேமகுமாரி, துணைத் தலைவர் டேவிட் ஆகியோர் விரைந்து டெம்போவை கொற்றிக்கோடு காவல் நிலையத்திற்கு கொண்டு ஒப்படைத்தனர்.
தொடர்ந்து போலீசார் விசாரனை நடத்தியதில் மூலச்சல், மணலிமூட்டு விளையை சேர்ந்த தனு என்பவர் முளகுமூடு பேருராட்சி பகுதியில் இருந்து கழிவுகளை ஏற்றி, கால்வாய் கரையில் கொட்ட வந்துள்ளது தெரிந்தது. இதையடுத்து கோதநல்லூர் பேருராட்சியின் சார்பில் கழிவுகளை கொட்ட வந்தவர்களுக்கு ரூ.25 ஆயிரம் அபதாரம் விதிக்கப்பட்டது.



