கன்னியாகுமரி, செப்டம்பர் 23 –
பா.ஜ., கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட செயலாளர் சி.எஸ். சுபாஷ் விடுத்துள்ள அறிக்கையில்: ஜி.எஸ்.டி விரி குறைப்பு மூலம் பிரதமர் நரேந்திர மோடி கூறிய கசப்பு மருந்து இனிப்பாக தொடங்க போகிறது.நம் தேச நலனுக்கு இத்தனை ஆண்டுகள் கசப்பு மருந்தினை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தந்தார்கள். அதன் விளைவு பொருளாதாரத்தில் பாரதம் தன்னிறைவு பெற்று உலக அரங்கில் தலைநிமிர்ந்து வெற்றி நடை போடுகிறது.
ஏதோ ஒரு மூலையில் நம் தேச தலைவர்கள் நின்ற காலம் போய் வல்லரசு நாட்டு தலைவர்கள் தொடங்கி பல தேச அதிபர்கள் நம் பிரதமர் மோடியை கட்டி அணைத்து வரவேற்கின்றனர். இந்த காட்சிகளை காண தேச பற்று கொண்ட இந்தியர்கள் கோடிகணக்கானோர் ஏங்கி தவித்த ஆண்டுகள் பற்பல. இந்த காட்சிகளை நிறைவேற்றி தந்த பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு தேச பற்று கொண்ட ஒவ்வொரு இந்தியர்கள் சார்பில் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.
கசப்பு மருந்து இனிப்பாக போகும் பொற்காலம் தொடங்க போகிறது.அத்தியாவசிய பொருட்களின் விலை பட்டியல்கள் குறைந்து ஏழை எளிய மக்களின் வாழ்வாதாரம் பெருக போகிறது. அவர்களின் நிம்மதி பெருமூச்சு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் பொற்கால ஆட்சியை இன்னும் நூறாண்டுகள் இழுத்து செல்லும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



