சேலம், ஜூலை 24 –
பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சேலம் ஜாகிர் அம்மா பாளையம் ஒருங்கிணைந்த ஜவுளி பூங்காவில் சாயப்பட்டறைகள் அமைக்க மறுப்பு தெரிவித்துள்ளது. பூங்காவில் உள்ள அனைத்து தொழில் துறை நிலங்களும் மக்களுக்கு பாதிப்பு தரும் சாயப்பட்டறை இல்லாத ஜவுளி தொடர்பான தொழில்களுக்கு மட்டுமே ஒதுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை இன்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் அரசாணையின் படி சிப்காட் நிறுவனம் பின்வரும் நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஜீரோ திரவ வெளியேற்றம் குறித்து இணக்கமாக சாயமிடும் அலகுகளை அமைப்பதற்கான வேறு பொருத்தமான இடங்களை கண்டறியவும், பூங்காவில் உள்ள 110 தொழில் துறை நிலங்களும் ஜவுளி தொழில்களுக்கு மட்டுமே ஒதுக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவ்வாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் கூறினார்.



