நாகர்கோவில், ஜூலை 31 –
கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தவெக செயலாளர் மாதவனின் 48வது பிறந்தநாள் கொண்டாட்டத்தை கட்சி நிர்வாகிகள் நாளை நடத்த உள்ளார்கள். அதற்கு அகில இந்திய தமிழர் கழகத்தின் நிறுவனர் முத்துக்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முத்துக்குமார் கூறியிருப்பதாவது: மக்கள் தளபதி விஜய்யின் நெஞ்சில் குடியிருக்கும் அன்பு சகோதரர் எஸ்.ஆர். மாதவன் அவர்களுக்கு பிறந்தநாள் நல்வாழ்த்துக்களை அகில இந்திய தமிழர் கழகத்தின் சார்பில் தெரிவித்துக் கொள்கிறோம்.
கடந்த தேர்தலில் கன்னியாகுமரி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட எஸ்.ஆர். மாதவன் 72,977 வாக்குகளை பெற்று மாவட்டத்தில் பிரதான முக்கியஸ்தராக தவெகவில் முன்னேறியுள்ளார். அவர்களின் சமுக பணி மேன்மேலும் சிறக்க மனதார வாழ்த்துகிறேன். இவ்வாறு முத்துக்குமார் கூறியுள்ளார்.



