தருமபுரி: செப்.02.
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், 2025–2026 கல்வியாண்டில் தருமபுரி அரசு செவித்திறன் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பயின்று அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியர் சரவணன், தேர்வில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை வழங்கி வாழ்த்தினார். தொடர்ந்து, மாணவர்களின் கல்வி சாதனையை பாராட்டிய அவர், உயர்கல்வியிலும் சிறப்பாக செயல்பட்டு எதிர்காலத்தில் பல்வேறு துறைகளில் சாதனை படைக்க வேண்டும் என ஊக்கமளித்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் கவிதா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மதுமதி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணன் உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினர்.



