சென்னை, மே 23 –
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சென்னை துறைமுக ஆணையரகத்தில் அதன் தலைவர் விஸ்வநாதன் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனத்தின் தலைவர் ஐரீன் சிந்தியா ஆகியோர் இணைந்து சென்னை துறைமுகங்களின் சமீபத்திய முன்னேற்றங்கள் மற்றும் சாதனைகள் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்தனர்.
அதில் பேசிய அவர்கள்: சென்னை துறைமுக ஆணையம் மற்றும் காமராஜர் துறைமுக நிறுவனம் இணைத்து கடந்த ஆண்டு 107 மில்லியன் மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. அதில் 57.9 மில்லியன் மெட்ரிக் டன் சென்னை துறைமுகமும் 49.08 மில்லியன் மெட்ரிக் டன் காமராஜர் துறைமுகமும் கையாண்டுள்ளது என்று தெரிவித்தனர்.
சென்னை துறைமுக ஆணையத்தில் கண்டெய்னர் கையாள்வது பொறுத்தவரை 6.7% கார்கள் ஏற்றுமதி 11.5% உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் கையாள்வது 11% அதிகரித்துள்ளது. காமராஜர் துறைமுக நிறுவனத்தில் கார்கள் ஏற்றுமதி கையாள்வது 18.8% அதிகரித்துள்ளதாகவும், மேலும் சென்னை மற்றும் காமராஜர் துறைமுகங்களில் இருந்து ஒவ்வொரு 80 வினாடிக்கும் ஒரு கார் ஏற்றுமதி செய்யப்படுவதாகவும் தெரிவித்தார்.
கடந்த 5 ஆண்டுகளில் வருவாய் நிலையான வளர்ச்சியுடன் கடந்த ஆண்டு சென்னை துறைமுகம் மற்றும் காமராஜர் துறைமுகம் இணைந்து 2400 கோடி வருமானம் ஈட்டியுள்ளதாகவும், கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் சென்னை துறைமுகம் சிறப்பான செயல்பட்டு 55.14% விகிதத்தை பெற்றுள்ளது. காமராஜர் துறைமுகத்தை பொறுத்தவரை வரி வருவாய் ஒதுக்கீடுக்கு முன் முதல் முறையாக ஆயிரம் கோடியை தாண்டி 1071.63 கோடியாக உள்ளது என தெரிவித்தனர். .



