By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிதமிழ்நாடு

சென்னை – திருவனந்தபுரம் ஆம்னி பேருந்தில் நடுவழியில் இறக்கி விடப்பட்ட தாய், மகள்; போலீசார் விசாரணை

Last updated: December 20, 2025 2:46 pm
December 20, 2025
142 Views
Share
SHARE

களியக்காவிளை, டிச. 20 –

சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்ல ஆம்னி பேருந்தில் பயணித்த நர்சிங் மாணவி மற்றும் அவரது தாயாரை களியக்காவிளை அருகே நடுவழியில் இறக்கிவிட்ட ஓட்டுநர், நடத்துநர் குறித்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டம், கழக்கூட்டம், குடவூர் பகுதியைச் சேர்ந்தவர் பாபு மகள் அனந்தலட்சுமி (18). சென்னையில் உள்ள தனியார் நர்சிங் கல்லூரியில் படித்து வருகிறார். கிறிஸ்துமஸ் விடுமுறை காரணமாக மாணவி அனந்தலட்சுமி மற்றும் அவரது தாயார் லிஜி (52) ஆகியோர் வியாழக்கிழமை மாலை சென்னையிலிருந்து திருவனந்தபுரத்துக்கு வந்த தனியார் ஆம்னி பேருந்தில் ஜிஎஸ்டி வரி உள்பட மொத்தம் ரூ. 4,083 கட்டணம் செலுத்தி பயணம் செய்தனர்.

பேருந்து வியாழக்கிழமை காலை 8.30 மணியளவில் களியக்காவிளை அருகே படந்தாலுமூடு பகுதியில் வந்தபோது, இப்பேருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லாது இங்கேயே இறங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறி இருவரையும் வலுக்கட்டாயமாக பேருந்திலிருந்து கீழே இறக்கி விட்டுள்ளனர்.

திருவனந்தபுரத்துக்கு பயணச்சீட்டு வழங்கி விட்டு பாதி வழியில் இறக்கி விடுவது குறித்து பேருந்து ஓட்டுநர், நடத்துநரிடம் மாணவி மற்றும் அவரது தாயார் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு தகாத வார்த்தைகள் பேசி மிரட்டினராம். தொடர்ந்து தங்கள் வீட்டுக்கு செல்வதற்கு வழி தெரியாத நிலையில் தவித்தபடி நின்ற இருவரையும் கண்ட அப்பகுதியினர் அவர்களை களியக்காவிளை பகுதிக்கு ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளனர்.

இதையடுத்து மாணவி தனது தாயாருடன் களியக்காவிளை காவல் நிலையம் சென்று தனியாக பயணம் செய்த பெண் பயணியிடம் மரியாதை குறைவாக செயல்பட்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் மீது பேருந்து நிர்வாகம் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் செய்தார். புகாரின் பேரில் போலீஸார் வழக்குப்பதிந்து, சம்பந்தப்பட்ட ஆம்னி பேருந்து ஓட்டுநர், நடத்துநர் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

காண்டாமிருக வண்டு மேலாண்மைக்கு பக்கெட் டிராப்: விவசாயிகளுக்கு செயல்விளக்கம்
கருங்கல் அருகே சைபர் கிரைம் வழக்கில் வாலிபரை பிடிக்க வந்த போலீசார் தள்ளி விட்டதில் மூதாட்டி பலி
குமரி கடலோர கிராமங்களில் 10 நாட்கள் குடிநீர் நிறுத்தம்
தலைமை ஆசிரியருக்கு கன்னத்தில் பளார் விட்ட பெண்
கன்னியாகுமரி கடலில் நாட்டுப்படகுகள் மூலம் தேர்தல் விழிப்புணர்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

ஈரோடு பெரிய சேமூர் பகுதியில்8 இடங்களில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

May 26, 2024
133 Views
வடசேரி குளத்தில்வாலிபர் சடலம்
மதுரை மாவட்டத்தில் மின் நுகர்வோர் குறைதீர் மன்றம்
பைக் மோதிய முதியவர் உயிரிழப்பு
திங்கள்நகர் பஸ் நிலையத்தில் பஸ்சுக்காக காத்திருந்த பெண்ணிடம் பணம் திருடிய 3 பெண்கள் கைது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account