களியக்காவிளை, மார். 17 –
களியக்காவிளை அருகே கேரளா மாநில பகுதியான செங்கல், மகேஸ்வரத்தில் சிவபார்வதி கோயில் உள்ளது. இந்த கோயிலில் உலகிலேயே மிகப் பெரிய சிவலிங்கம், வைகுண்டம், தேவலோகம் அமைக்கப்பட்டுள்ளது. சிவலிங்கம் மற்றும் வைகுண்டத்தின் மேல் பகுதியில் ஆஞ்சனேய சுவாமிகள் காற்றில் பறந்து செல்வது போன்ற காட்சி தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனை காண தினமும் இந்தியாவில் பல மாநிலங்களில் இருந்தும் வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.
இவ்வளவு மகிமை பொருத்திய சிவபார்வதி கோயிலில் ஆத்மீக உணர்வுடன் இசை நிகழ்ச்சி நடத்தி கலைஞர்களை ஊக்கப்படுத்தும் விதமாக சங்கீத சுதஸ் என்ற இன்னிசை கச்சேரி ஒரு வருட காலம் ஞாயிற்றுக்கிழமை தினங்களில் மாலை நடத்தப்படுகிறது. இதற்கான சங்கீத சதஸ் என்ற மண்டபம் தனியாக வடிவமைக்கப்பட்டுள்து. இதன் துவக்க விழா நிகழ்சி மார்ச் 15-ம் தேதி நடந்தது.
இதில் கோாயில் நிர்வாக தலைவர் குமார் தலைமை வகித்தார். கோயில் மடாதிபதி சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி திருவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை துவக்கி வைத்தார் சங்கீத வித்வான் மகேஸ்வரதப்பன் இசை நிகழ்ச்சியை நடத்தினார். ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். இசை கலை ஆர்வம் உடைய கலைஞர்கள் பங்கேற்க வரவேற்கப்படுகிறார்கள் என சுவாமி மகேஸ்வரானந்த சரஸ்வதி கூறினார்.



