கோவை, மே 01 –
கோவை மாவட்டம் சிங்காநல்லூர் கோவை ஜில்லா பஞ்சாலை தொழிலாளர் சங்க அலுவலக வளாகத்தில் தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே தின கொடியேற்றி மே தின உரிமை மாநாடு சங்கத்தின் தலைவர் மாநில எச் எம் எஸ் அமைப்பின் செயல் தலைவருமான டி எஸ் ராஜாமணி தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த மாநாட்டில் 140 ஆண்டுகளுக்கு முன்னால் 8 மணி நேர வேலை மட்டுமே வேண்டும் என்கிற கோரிக்கைக்காக போராடி, செந்நீர் சிந்தி உயிர் நீத்த தியாகிகளின் நினைவில் அவர்களின் தியாகம் போற்றி தொழிலாளர் வர்க்க உரிமைகளை பாதுகாக்கவும் புதிய உரிமைகளை வென்றெடுக்கவும் இந்த மாநாட்டில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.
நிகழ்ச்சியில் முதன்மைச் செயலாளர் ஜி மனோகரன் வாழ்த்துரை வழங்கினார். சங்க நிர்வாகிகள் தேவராஜன், சண்முகம், மோகன்ராஜ், பழனிச்சாமி, மோகன்ராஜ், தங்கவேலு, சண்முகம், நாகராஜ் சௌந்தர்ராஜன், ரமண குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.



