மதுரை திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள காசி விஸ்வநாதர் கோயிலுக்கு ரோப் கார் வசதி அமைக்க வேண்டும் என்று பக்தர்களின் நீண்ட கால கோரிக்கையின் அடிப்படையில் ரோப் கார் அமைப்பதற்காக சர்வே பணிகள் துவங்கியது. இரண்டாவது கட்டமாக நடைபெற்று வரும் இந்த ஆய்வு பணிகள் முடிந்ததும், இந்நிறுவனம் திட்ட மதிப்பீடு தயாரித்து வழங்கும். அதன் பின்பு சில வாரங்களில் ரோப்கார் அமைக்கும் பணிகள் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது



