நாகர்கோவில், ஜூலை 23 –
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் சட்டவிரோத கனிம வளக் கடத்தல்களை தடுக்கும் வகையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன் தொடர்ச்சியாக, மார்த்தாண்டம் உக்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் சங்கர் கணேஷ் மேற்பார்வையில் நடந்த சோதனையில் கொல்லங்கோடு, களியக்காவிளை காவல் நிலைய எல்லைகளில் ஆவணங்கள் இன்றி டிப்பர் வாகனங்களில் எம்-சாண்ட் ஐ கேரள மாநிலத்திற்கு சட்டவிரோதமாக கடத்தியது கண்டறியப்பட்டது.
இதனைத் தொடர்ந்து கொல்லங்கோடு, களியக்காவிளை காவல் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 4 டிப்பர் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.


