களியக்காவிளை, ஜூலை 27 –
குழித்துறை அருகே உள்ள ஈத்தவிளை பகுதியை சேர்ந்தவர் முருகன் மனைவி அமுதா. இவர் வீட்டின் மாடியில் ஏறி கொய்யாப்பழம் பறித்துக் கொண்டிருந்தார். அப்போது அங்கிருந்த ஆஸ்பெட்டாஸ் ஷீட் விளிம்பில் மிதித்த போது, ஷீட் உடைந்து விட்டதாக தெரிகிறது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த அமுதா படுகாயம் அடைந்தார்.
அவரை உடனடியாக மீட்ட உறவினர்கள் அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிட்சைக்காக திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இன்றி அமுதா இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து களியக்காவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


