நாகர்கோவில் செப் 26
கேரளாவில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்துள்ள நிலையில் அவருடன் தொடர்பில் இருந்த 250 பேரை கண்டறியப்பட்டு அவர்களை கண்காணித்து வரும் நிலையில் கடந்த 18 தேதி முதல் தமிழக சுகாதாரத்துறை சார்பில் தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் 24 மணி நேர வாகன சோதனை நடைபெற்று வரும் நிலையில் சுகாதாரத்துறை சார்பாக நேற்று 8-வது நாளாக தீவிர பரிசோதனையானது நடைபெற்று வருகிறது.
கேரள மாநிலம் மலப்புறம் மாவட்டத்தில் ஒருவருக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதித்து சிகிச்சை நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை அடுத்து கேரள சுகாதாரத்துறை சார்பில் வைரஸ் பரவாமல் இருக்கும் விதமாக இந்த வைரஸ் உறுதி செய்யப்பட்ட நபருடன் தொடர்பில் இருந்த 250 பேரை கண்டறியப்பட்டு அவர்களை கண்காணித்து வருவதுடன் மேலும் மலப்புறம் மாவட்டத்தில் ஒருவருக்கு MPOX என்னும் வைரஸ் அறிகுறி இருக்கிறதா என்று சந்தேகத்தின் பெயரில் அவர்களது மாதிரிகளை எடுத்து பரிசோதனை செய்து வரும் நிலையில்
தற்போது கேரளாவில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் குமரி வழியாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு தினசரி அரசு பேருந்துகள், இருசக்கர வாகனங்கள் மற்றும் தனியார் வாகனங்களில் செல்வதால் குமரி தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் தமிழக சுகாதாரத் துறை சார்பில் கடந்த 18 ஆம் தேதி முதல் கேரளாவில் இருந்து வரும் வாகனங்களை சோதனை செய்து இந்த வாகனங்களில் வரும் நபர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை செய்து வாகன எண்களை குறித்து கொள்வதுடன் எங்கிருந்து வருகிறார்கள் அதேபோல் தமிழக எல்லைக்குள் எந்த பகுதிகளுக்கு செல்கிறார்கள் என்பதையும் கேட்டறிந்து குறித்துக் கொள்கின்றனர்.
இதனை அடுத்து தமிழக கேரள எல்லை பகுதியான களியக்காவிளை பகுதியில் சுகாதாரத்துறை சார்பில் பணி மாற்றம் முறையில் 24 மணி நேர வாகன சோதனையானது நடைபெற்று வரும் நிலையில் 8-வது நாளாக தீவிரமாக சுகாதார துறையினர் போலீசார் உதவிகளுடன் தனியார் வாகனங்கள், இருசக்கர வாகனங்கள், அரசு பேருந்துகள் என அனைத்து வாகனங்களையும் தீவிரமாக சோதனை செய்து வருகின்றனர்.



