நாகர்கோவில், ஜூலை 23 –
கன்னியாகுமரி கோட்ட அஞ்சல் கண்காணிப்பாளர் தீத்தாரப்பன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் ஆதார் சேவையை அதிகப்படுத்தும் நோக்கில், மதுரை மண்டல அலுவலகத்தின் உத்தரவின் படி “ஆதார் ஆடி உற்சவம்” சிறப்பு முகாம் 23.07.2026 முதல் 29.07.2026 வரை நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தின் கீழ் ஆதார் வசதி கொண்ட அஞ்சலகங்களில் தினமும் 50-க்கும் மேற்பட்ட ஆதார் பரிவர்த்தனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் இந்தச் சிறப்பு வாய்ப்பைப் பயன்படுத்தி, தங்களது ஆதார் தொடர்பான புதிய பதிவு, முகவரி மாற்றம், மொபைல் எண் புதுப்பித்தல், பெயர் மற்றும் பிறந்த தேதி திருத்தம், புகைப்படம், கைரேகை மற்றும் கருவிழிப் பதிவு உள்ளிட்ட பயோமெட்ரிக் புதுப்பித்தல் போன்ற சேவைகளை மேற்கொள்ளலாம்.
கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தில் நாகர்கோவில், தக்கலை தலைமை அஞ்சலகம் மற்றும் , குழித்துறை, மார்த்தாண்டம், சுசீந்திரம், கன்னியாகுமரி,கோட்டார், நெய்யூர், குளச்சல், நாகர்கோவில் டவுன், வெட்டூர்ணிமடம், களியக்காவிளை, கருங்கல் , குலசேகரம், திருவட்டார், ஆரல்வாய்மொழி, அழகப்பபுரம், அழகியபாண்டிபுரம், பூதப்பாண்டி, ஈத்தாமொழி, கொட்டாரம், மணவாளக்குறிச்சி, நாகர்கோவில் கலெக்டரேட், நாகர்கோவில் தொழிற்பேட்டை, நாகர்கோவில் டவுன், அருமனை, கொல்லங்கோடு, மேக்காமண்டபம், முளகுமூடு, புதுக்கடை, ஆசாரிப்பள்ளம், பாலப்பள்ளம், புத்தளம், திக்கணங்கோடு, வில்லுக்குறி, இடைக்கோடு, காப்புக்காடு, காட்டாத்துறை, பளுகல், எஸ்.டி. மாங்காடு, திருவிதாங்கோடு உள்ளிட்ட அஞ்சலகங்களில் ஆதார் சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
மேலும், பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் கூடும் இடங்களில், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் அல்லது அமைப்புகளின் கோரிக்கையின் அடிப்படையில் அவர்களது இடங்களிலேயே சிறப்பு ஆதார் முகாம்கள் நடத்தவும் ஏற்பாடு செய்யப்படும். சிறப்பு முகாம் தேவைப்படும் நிறுவனங்கள் கன்னியாகுமரி அஞ்சல் கோட்டத்தை அல்லது அருகில் உள்ள அஞ்சல் அலுவலகத்தைத் தொடர்புகொண்டு தங்களது கோரிக்கையைத் தெரிவிக்கலாம்.
எனவே, பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் 23.07.2026 முதல் 29.07.2026 வரை நடைபெறும் “ஆதார் ஆடி உற்சவம்” நிகழ்வைப் பயன்படுத்தி, தங்களுக்கு அருகிலுள்ள ஆதார் சேவை வசதி கொண்ட அஞ்சலகங்களை அணுகியோ அல்லது சிறப்பு முகாம்களின் வாயிலாகவோ தேவையான ஆதார் சேவைகளைப் பெற்றுப் பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. என அறிக்கையில் கூறியுள்ளார்.


